1ர்மண்யேவாதி4கா1ரஸ்தே1 மா ப2லேஷு க1தா31ன |

மா க1ர்மப2லஹேது1ர்பூ4ர்மா தே1 ஸங்கோ3‌ஸ்த்1வக1ர்மணி ||47||

கர்மணி---விதிக்கப்பட்ட கடமைகளில்;  ஏவ—--மட்டுமே;அதிகாரஹ—--உரிமை; தே—-உன்; மா—- இல்லை; ஃபலேஷு—-பலன்களில்; கதாசன—--எந்த நேரத்திலும்; கர்மபல—-செயல்பாடுகளின் முடிவுகள்; ஹேதுஹு—--காரணம் ; பூஹு--—இருக்கவும் மா---இல்லை;தே---உனக்கு; ஸங்கஹ-—-பற்றுதல்;; அஸ்து—--இருக்க வேண்டும் அகர்மணி—-செயலற்ற நிலையில்

అనువాదం

BG 2.47: உனக்கு பரிந்துரைக்கப்பட்ட கடமைகளைச் செய்ய உனக்கு உரிமை உண்டு, ஆனால் உன் செயல்களின் பலன்களைப் பெற உனக்கு உரிமை இல்லை. ஒருபோதும் உன் செயல்களின் முடிவுகளுக்கு நீயே காரணம் என்று கருதாதே, அல்லது செயலற்ற தன்மையுடன் இணைந்து இருக்காதே.

వ్యాఖ్యానం

பகவத் கீதையின் மிகவும் பிரபலமான வசனம் இது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் கூட இதைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இது செயல்களின் சரியான உணர்வைப் பற்றிய ஆழமான நுண்ணறிவை வழங்குகிறது; மற்றும், கர்ம யோகத்தின் தலைப்பு விவாதிக்கப்படும் போதெல்லாம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. இந்த வசனம் வேலையின் அறிவியலைப் பற்றிய நான்கு வழிமுறைகளை வழங்குகிறது: 1) உங்கள் கடமையைச் செய்யுங்கள், ஆனால் முடிவுகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். 2) உங்கள் செயல்களின் பலன்கள் உங்கள் மகிழ்ச்சிக்காக இல்லை. 3) செயல்களை செய்யும் போதும் செய்பவர் என்ற பெருமையை விட்டுவிடுங்கள். 4) செயலற்ற தன்மையுடன் இணைந்திருக்காதீர்கள்.

உங்கள் கடமையைச் செய்யுங்கள், ஆனால் முடிவுகளைப் பற்றி கவலைப்படாதீர்கள்: நம் கடமையைச் செய்ய நமக்கு உரிமை உண்டு, ஆனால் முடிவுகள் நம் முயற்சியில் மட்டும் சார்ந்து இல்லை. முடிவுகளைத் தீர்மானிக்க பல காரணிகள் செயல்படுகின்றன-நமது முயற்சிகள், விதி (நமது கடந்தகால முன்வினைப் பயன்களின் அடிப்படையில்), கடவுளின் விருப்பம், மற்றவர்களின் முயற்சிகள், சம்பந்தப்பட்டவர்களின் ஒட்டுமொத்த முன்வினைப் பயன்கள், இடம் மற்றும் சூழ்நிலை (அதிஷ்டத்தை சார்ந்தது), முதலியன. முடிவுகளுக்காக நாம் ஆர்வமாக இருந்தால், அவை நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லாத போதெல்லாம் நாம் கவலையை அனுபவிப்போம். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் முடிவுகளைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு, ஒரு வேலையை நன்றாக செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகிறார். உண்மை என்னவென்றால், முடிவுகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருக்கும்போது, ​​​​நம் முயற்சிகளில் முழு கவனம் செலுத்த முடியும், மேலும் விளைவு முன்பை விட சிறப்பாக இருக்கும்.

என். ஏ. டி. ஓ (NATO-Not Attached to Outcome) இதற்கான நகைச்சுவையான சுருக்கம் நேட்டோ அல்லது விளைவுடன் இணைக்கப்படவில்லை. கோல்ஃப் விளையாடுவது போன்ற எளிய அன்றாட நடவடிக்கைகளுக்கு அதன் பயன்பாட்டைக் கவனியுங்கள். மக்கள் கோல்ஃப் விளையாடும்போது, ​​முடிவைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவார்கள் இப்போது அவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு ஷாட்களை விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தால், அவர்கள் இதுவரை விளையாடிய கோல்:ப் விளையாட்டை விட இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். கூடுதலாக, அவர்கள் விளையாடும் ஷாட்டில் முழு கவனம் செலுத்தினால், அவர்களின் ஆட்டம் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும்.

உங்கள் செயல்களின் பலன்கள் உங்கள் மகிழ்ச்சிக்காக இல்லை: செயலைச் செய்வது மனித இயல்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவ்வுலகிற்கு வந்தபிறகு, நம் குடும்பச் சூழ்நிலை, சமூக நிலை, தொழில், பல்வேறு பொறுப்புகள் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட பல்வேறு கடமைகள் நம் அனைவருக்கும் உள்ளன. இந்த செயல்களைச் செய்யும்போது, ​​நாம் முடிவுகளை அனுபவிப்பவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - முடிவுகள் கடவுளின் மகிழ்ச்சிக்காக மட்டுமே. தனிப்பட்ட ஆன்மா என்பது கடவுளின் ஒரு சிறிய பகுதியாகும் (வசனம் 15.7), மற்றும் நமது உள்ளார்ந்த இயல்பு நமது எல்லா செயல்களிலும் அவருக்கு சேவை செய்வதாகும்.

தா3ஸ பூ41மித3ம் த1ஸ்ய ஜக3த்1ஸ்தா2வர ஜங்க3மம்

ஸ்ரீமன்நாராயண ஸ்வாமி ஜக3தா1ம்ப்1ரபு4ரீஶ்வரஹ (ப1த்3ம பு1ராணம்)

‘கடவுள் முழு படைப்பிற்கும் அதிபதி; அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் அவருடைய அடியார்கள்.’ பொருள் உணர்வு என்பது பின்வரும் எண்ணங்களால் வகைப்படுத்தப்படுகிறது, 'என்னிடம் உள்ள அனைத்திற்கும் நானே உரிமையாளர். இதெல்லாம் என்னுடையது. இது எல்லாம் என் மகிழ்ச்சிக்காகவே. எனது உடைமைகளை அதிகப்படுத்தவும், என் இன்பத்தை அதிகப்படுத்தவும் எனக்கு உரிமை உண்டு.’ இதற்கு நேர்மாறானது ஆன்மீக உணர்வு, இது ‘இந்த முழு உலகத்தின் உரிமையாளரும் அனுபவிப்பவரும் கடவுளே’ போன்ற எண்ணங்களால் வகைப்படுத்தப்படுகிறது. ‘நான் அவருடைய தன்னலமற்ற வேலைக்காரன் மட்டுமே. என்னிடம் உள்ள அனைத்தையும் நான் கடவுளின் சேவையில் பயன்படுத்த வேண்டும்.’ இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் தனது செயல்களின் பலனை அனுபவிப்பவராக தன்னை நினைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

செயல்களை செய்யும் போது கூட செய்பவர் என்ற பெருமையை விட்டுவிடுங்கள்: அர்ஜுனன் செய்பவர் அல்லது க1ர்த்1ரித்1வாபி4மான்  என்ற அஹங்காரத்தை கைவிட வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விரும்புகிறார். அவர் அர்ஜுனனிடம் தனது செயல்களுடன் இணைக்கப்பட்ட முன்கூட்டிய நோக்கங்களைத் பின் தொடவோ அல்லது அவரது செயல்களின் விளைவுகளுக்கு தன்னைக் காரணமாகக் கருதவோ வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

நாம் செயல்களைச் செய்யும்போது, ​​அந்தச் செயல்களைச் செய்பவர்களாக நாம் ஏன் கருதக்கூடாது? காரணம், நமது புலன்கள், மனம், புத்தி ஆகியவை ஜடமானவை; கடவுள் தம்முடைய வல்லமையால் அவைகளை உற்சாகப்படுத்தி, நம் வசம் வைக்கிறார். இதன் விளைவாக, நாம் அவரிடமிருந்து பெறும் சக்தியின் உதவியுடன் மட்டுமே செயல்பட முடிகிறது. உதாரணமாக, சமையலறையில் உள்ள இடுக்கிகள் தானாகவே செயல்படாமல் இருக்கும், ஆனால் யாரோ ஒருவரின் கையால் சக்தியூட்டப்பட்டால், எரியும் நிலக்கரியை தூக்குவது போன்ற கடினமான வேலைகளையும் செய்கின்றது. இடுக்கி செயல்களைச் செய்கிறது என்று கூறுவது தவறாகும். கை அவர்களை உற்சாகப்படுத்தவில்லை என்றால், அவைகளால் தானாக இயங்க முடியாது . மேடையில் வைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே, கடவுள் நமது உடல்-மன-ஆன்மா பொறிமுறைக்கு செயல்களைச் செய்வதற்கான சக்தியை வழங்கவில்லை என்றால், நாம் எதையும் செய்திருக்க முடியாது. எனவே, நம் செயல்கள் அனைத்தையும் செய்யும் சக்திக்கு கடவுள் மட்டுமே ஆதாரம் என்பதை நினைவில் கொண்டு, நாம் செயல்களை செய்பவர் என்ற அகந்தையை கைவிட வேண்டும்.

மேற்கூறிய எண்ணங்கள் அனைத்தும் பின்வரும் பிரபலமான ஸ்மஸ்கிருத வசனத்தில் மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன:

யத்1க்ரு1தம் யத்11ரிஷ்யாமி த1த்1ஸர்வம் ந மயா க்1ருத1ம்

த்1வயா க்ருத1ம் து1 ஃப2லபு4க்1 த்1வமேவ மது4ஸூத3

‘நான் எதைச் சாதித்தாலும், எதைச் சாதிக்க விரும்பினாலும், இவற்றைச் செய்பவன் நான் அல்ல. மதுஸூதனா, நீயே உண்மையாகச் செய்பவன், நீயே அவற்றின் பலனை அனுபவிப்பவன்.’

செயலற்ற தன்மையில் பற்றுக் கொள்ளாதே: உயிர்களின் இயல்பு வேலை செய்வதாக இருந்தாலும், வேலை பாரமாகவும் குழப்பமாகவும் தோன்றும் சூழ்நிலைகள் அடிக்கடி எழுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிலிருந்து ஓடுவதற்குப் பதிலாக, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்கியபடி, சரியான செயல் அறிவியலைப் புரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும். நாம் வேலையை உழைப்பு மற்றும் சுமையாக கருதி செயலற்ற தன்மையை நாடினால் அது மிகவும் பொருத்தமற்றது. செயலற்ற தன்மையுடன் இணைந்திருப்பது ஒருபோதும் தீர்வாகாது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரால் தெளிவாகக் கண்டிக்கப்படுகிறது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
2. ஸாங்கிய யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency